புதன், 26 ஏப்ரல், 2023

சுவாமி பிரபஞ்சநாதன் புத்தகங்கள்

 சுவாமி பிரபஞ்சநாதன் எழுதிய புத்தகங்களைப் படிக்க, கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்துக் கொள்ளலாம்.




36 தத்துவங்கள்

 

36 தத்துவங்கள்

 

தமிழ் வேதாந்த இலக்கியங்களில் இந்த ஜீவ - ஈஸ்வரப் - பிரபஞ்சம் 36 தத்துவங்களாக பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.

ஜீவனிடம் இருக்கும் தத்துவங்கள்:

அ) ஸ்தூல சரீரம் - தத்துவங்கள் - 6

1) தோல்
2) சதை
3) ரத்தம்
4) நரம்பு
5) எலும்பு
6) மஞ்சை என ஸ்தூல தத்துவங்கள் மொத்தம் (6)
 

இந்த 6 தத்துவங்களும் ஸ்தூல பஞ்சபூதங்களிலிருந்து இறைவனால் ஆக்கிக் கொடுக்கப்பட்டது.


ஆ) சூக்கும சரீரம் - தத்துவங்கள் 20:

1) பஞ்ச வாயுக்கள் - 5

1) பிராணன்
2) அபானன்
3) வியானன்
4) உதானன்
5) சமானன் என வாயுத் தத்துவங்கள் மொத்தம் (5)


2) கர்மேந்திரியங்கள் - 5

1) வாக்கு
2) பாணி
3) பாதம்
4) கருவாய்
5) எருவாய் என கர்மேந்திரியங்கள் மொத்தம் (5)
 

3) ஞானேந்திரியங்கள் - 5

கேட்கும் கருவி(காது)
பார்க்கும் கருவி (கண்)
நுகரும் கருவி (மூக்கு)
சுவைக்கும் கருவி (நாக்கு)
தொடு உணர்வுக் கருவி(தோல்) என ஞானேந்திரியங்கள் மொத்தம் (5)
 

(கண், காது என்பவை ஸ்தூலத்திலும், அதன் செயல்படு தன்மையான கருவிகள் சூக்கும சரீரத்தில் என அறிக)

4) அந்தகரணங்கள் - 5

1) மனம்
2) புத்தி
3) சித்தம்
4) அகங்காரம்
5) உள்ளம் என அந்தகரணத் தத்துவங்கள் மொத்தம் (5)

 ஆக, சூக்கும சரீரம் (பஞ்ச வாயுக்கள் + பஞ்ச கர்மேந்திரியங்கள் + பஞ்ச ஞானேந்திரியங்கள் + பஞ்ச அந்தகரணங்கள்) 20 தத்துவங்கள்.

காரண சரீரத் தத்ததுவங்கள் (2)

1) ஜீவன்
2) ஜீவனுக்குக் காரணமான அவித்தை எனும்
ராஜஸ குணம் 

ஆக, ஜீவனிடம் மட்டும் தூல தத்துவம் 6 + சூக்கும சரீரத் தத்துவங்கள் 20 + காரண சரீரத் தத்துவங்கள் 2 என 28 தத்துவங்கள் ஜீவனுக்குள்ளே இருக்கின்றன. 

ஆக, மொத்தம் இருக்கும் 36 தத்துவங்களில், 28 தத்துவங்கள் ஜீவனுக்குள்ளே இருக்கின்றன. 

இவ்வாறு படைக்கப்பட்ட ஒவ்வொரு ஜீவனின் ஸ்தூல, சூக்கும சரீரங்கள் அஞ்ஞான சக்தி எனும் தாமஸ குணத்திலிருந்து வந்த ஸ்தூல, சூக்கும பஞ்ச பூதங்களிலிருந்து இறைவனால் ஆக்கிக் கொடுக்கப்பட்டது. 

ஒவ்வொரு ஜீவனின் காரண சரீரமாக இருப்பது அவித்தை எனும் ராஜஸ குணமே. 

அதாவது ஜீவனின் காரண சரீரம் அவித்தையாகவும் (ராஜஸ குணமாகவும்) காரிய சரீரங்ககளான ஸ்தூல சூக்கும சரீரங்கள் அஞ்ஞான பஞ்சபூத. காரியங்களாக (தாமஸ குணமாக) ஜீவனுக்குள்ளே இருக்கிறது. 

ஜீவனுக்கு வெளியே இருக்கும் ஸ்தூல பஞ்ச பூதங்கள் மற்றும் மாயை, ஈஸ்வர தத்துவங்கள் மொத்தம் 7.

1) மண்
2) தண்ணீர்
3) நெருப்பு
4) காற்று
5) ஆகாயம்

6) ஈஸ்வரன்
7) ஈஸ்வரனுக்குக் காரணமான மாயை எனும் சத்துவ குணம்.
 

ஆக, ஜீவ தத்துவங்கள் - 28
பஞ்ச பூதங்கள் - 5
ஈஸ்வரன் - 1
மாயை - 1
 

ஜீவேஸ்வர ஜகத் தத்துவங்கள் மொத்தம் (28+7) - 35 தத்துவங்கள். 

இந்த 35 அநித்தியமான, கல்பிதமான தோற்ற தத்துவங்களுக்குள்ளும் ஊடுருவி நிற்கும் வாஸ்தவமான நித்தியமான 36ஆவது தத்துவம் பிரம்மமே!

இந்த பிரம்மத்தைத் தவிர அனைத்து 35 தத்துவங்களும் அநித்தியம் என்றும், பிரம்மம் மட்டுமே நித்தியம், சத்தியம் என்றும் பிரித்து அறிவதே
ஆத்ம ஞானம் ஆகும். 

ஆக, பிரம்மமே உனக்குள் இருக்கும் ஆத்மா!

  ஓம் தத் ஸத்!

கைவல்ய நவநீதம் - தத்துவ விளக்கப் படலம் [பாடல்கள் 41 48]

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

பஞ்சீகரணம்


பஞ்சீகரணம்

பஞ்சீகரணம் (Panchikarana) எனில் ஐந்தின் சேர்க்கை என்று பொருள். பிரபஞ்சம் மற்றும் சீவராசிகள், சூக்கும நிலையில் உள்ள ஆகாயம் முதலிய பஞ்சபூதங்கள், குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருவாகும் பருப்பொருளின் (ஸ்தூலம்) (Matter) தோற்றத்திற்கு பஞ்சீகரணம் என்று சாங்கிய தத்துவம் சொல்வதை வேதாந்த சாஸ்திரமும் ஏற்றுக் கொள்கிறது. 

படைப்பின் தொடக்கத்தில் தோன்றிய சூக்கும பூதங்கள் (பஞ்ச சூக்கும பூதங்கள்) ஒன்றுடன் ஒன்று சேர்க்கை நடைபெறாமல் இருந்ததால் செயல்பாடுகள் நிறைந்த உலகிற்குத் தகுந்த ஸ்தூலப்பொருட்கள் (பருப் பொருட்கள்) (ஸ்தூலப் பொருள்கள்) தோற்றுவிக்கும் திறமையற்று விளங்கியது. 

பஞ்சீகரணத்தால் சூக்கும பூதங்கள், ஸ்தூல வடிவ பஞ்ச பூதங்களாக வெளிப்படும் தன்மையைப் பெற்று செயலாற்றும் தகுதியைப் பெறுகின்றன. 

சூக்கும நிலையில் உள்ள பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றும் இரு சமமான பகுதிகளாகப் பிரிக்கப் படுகின்றன. 

இவ்விதமாக பிரிக்கப்பட்ட பத்து பகுதிகளில் முதல் ஐந்து பகுதிகள் ஒவ்வொன்றும் நான்கு சமமான பகுதிகளாக பிரிக்கப்படுகின்றது. 

இதன் பிறகு, ஒவ்வொரு பூதத்தின் மூலப் பொருளின் ஒரு பகுதி மற்ற நான்கு மூலப் பொருட்களின் நான்கு பகுதிகளுடன் சேர்க்கப்படுகிறது.

சனி, 15 ஏப்ரல், 2023

ஆங்காரம் நீக்கும் ஓங்காரம்

 



இதன் புத்தகத்தைப் படிக்க...

ஆங்காரம் நீக்கும் ஓங்காரம் புத்தகம்

 

ஆங்காரம் நீக்கும் ஓங்காரம்

  

 ஓம் என்பதையே ஓங்காரம் என்று அழைக்கிறோம். இந்த ஓம் என்ற ஒற்றை வார்த்தையை ’, ‘’, ‘ என்ற மூன்று எழுத்துக்கள் ஒருங்கிணைந்த நிலையில் உண்டான ஒரு சொல்லாக நம் முன்னோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

இந்த ஓம் என்ற ஒன்றைக் கொண்டு தொடங்காத மந்திரங்களே இல்லை எனலாம். ஏன்? இந்த ஓம் என்ற சொல் எல்லா மந்திரங்களுக்கும் முதலாவதாக கொடுக்கப்பட்டுள்ளது? மேலும், இந்த எழுத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? போன்ற சந்தேகங்கள் பலருக்கும் இதன் பயன்பாட்டில் உள்ளது. 

இது இந்து மத இறை வழிபாட்டில் பயன்படுகின்ற எல்லா வேத மந்திரங்களுக்கும் முன்னால், ஓம் கொடுக்கப்பட்டிருப்பதற்குக் காரணம், இந்த உலகம் இயங்கத்தேவையான படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலை புரியக்கூடிய புதிரான எழுத்தாக இந்த ஒரு எழுத்து எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

அதாவது, படைக்கப்பட்ட அனைத்து சீவராசிகளிலும் மனிதன் மட்டுமே மகத்தான பகுத்தறிவைக் கொண்டவன் என்பதினால், அவனால் மட்டுமே எழுத்துக்களைக் கொண்டு, அழகான சொற்களை வடிவமைத்து, அதன் வாயிலாகப் பேசக் கூடிய சக்தியைக் கொண்டவன். 

ஆகவே, அவன் சாதாரணமாக வாயை திறக்க முற்பட்டாலேயே, அது என்ற அமைப்பில் மட்டுமே அமைந்திருக்கும். அதனால், அவனிடமிருந்து முதன் முதலாக வெளிப்படும் ஓசை என்பது என்று உதிக்கின்றது. அதன் பிறகுதான் மற்ற வார்த்தைகள் உண்டாகும். அதிலே, அந்த என்ற உச்சரிப்பின் நீட்டம் என்று காக்கப்பட்டு, இறுதியில், அந்த ஓசையின் முடிவாக ம் என்று முற்று பெறுகிறது. 

இதனால், ஒரு சொல் பிறந்து, வளர்ந்திருந்து, இறுதியில் இல்லாமல் போவதைக் குறிக்கும் குறியீடாக இந்த ஓம்என்பது இருப்பதினாலே, இந்த பிரபஞ்சத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்கள் நடைபெறுகின்றது என்பதை எடுத்துக் கூறுவதே, இந்த ஓம் என்ற பதத்தின் பரமபத பாதையாகும். 

ஓம் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். 

இந்து சமயத்தில் வேதத்தில் இருந்து, உபநிஷதங்கள், கீதை, பாஷ்யங்கள் என்று எங்கு பார்த்தாலும் இந்த ஓம் சிறப்பித்து கூறப்படுகிறது. 

அப்படி என்ன அதில் சிறப்பு இருக்கிறது? 

அது ஒரு வார்த்தை - அவ்வளவுதானே!...

இதைப்பற்றி மேலும் அறிய, இந்த நூலைப் படிக்கவும்.

நன்றி!

ஓம் தத் ஸத்!

செவ்வாய், 11 ஏப்ரல், 2023

கைவல்ய நவநீதம் தத்துவ விளக்கப் படலம் [பாடல்கள் 22 30]



 

கைவல்ய நவநீதம்


(ஸ்ரீமத் தாண்டவராய சுவாமிகள்)

 

 

முகவுரை

கைவல்ய நவநீதம் என்பது ஒர் வேதாந்த மெய்யியல் தமிழ் நூல் ஆகும்.

       தமிழ் அத்வைத வேதாந்த நூல்களில் தலை சிறந்தது கைவல்ய நவநீதம் எனப்படுகிறது.

 இந்த நூல் 1500 - களில் எழுதப்பட்டது. இந்த நூலை நன்னிலம் ஸ்ரீ நாராயண தேசிகரின் மாணவர் ஸ்ரீமத் தாண்டவராய சுவாமிகள் அவர்களால் இயற்றப்பட்டது. 

இந்நூலில் ஆசிரியருக்கும், நன்மாணவனுக்கும் இடையே நிகழுகின்ற உரையாடல் போலவும், ஒரு தந்தை தன் மகனுக்கு கூறும் அறிவுரைகள் போலவும் எழுதப்பட்டு உள்ளது. 

இந்த நூலில் தத்துவ விளக்கப்படலம், சந்தேகம் தெளிதற் படலம் என்று இரு பெரும் பகுதிகள் உள்ளன.

முதலில், தத்துவங்களை விளக்கி, அதன் பிறகு, அதில் உண்டாகும் சந்தேகங்களுக்கு விடை அளிப்பது போன்று இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

உன்னை நீ அறிவாயா! [வகுப்பு - 16] - நிறைவுப்பகுதி.



நமக்குள்ளே இருக்கும் படைப்பாற்றத்தான் ஈஸ்வரன் என்று பார்த்தோம். அந்த படைப்பாற்றல் என்ன செய்யும்? முதலில் படைக்கும், பின் படைத்தவற்றை காக்கும், பிறகு வேண்டாத அல்லது காலாவதியான படைப்புகளை அழிக்கும்.
இங்கு இன்னொரு முக்கியமான விசயத்தை கவனிக்க வேண்டும். இந்த பாடத் திட்டத்தை மீண்டும், மீண்டும் கேட்க வேண்டும். அப்போதுதான் இங்கு கூற வருகின்ற படைப்பின் இரகசியம் விளங்கும். இங்கு உண்மையிலேயே ஈஸ்வரன் என்பவன் படைக்கும் சக்தி மட்டும்தான். அதனால்தான் படைத்தவற்றை அது அழிப்பதுப் போன்று தோன்றினாலும், உண்மையில் அது வேறு ஒன்றாகப் படைக்கப்படுகின்றது என்பதை மறந்து விடக்கூடாது. அறிவியல் கூற வருவதும் இதைத்தான். ஒரு ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஆனால், ஒரு ஆற்றலை வேறு ஒரு ஆற்றலாக மாற்ற முடியும்.
சரி விசயத்திற்கு வருவோம். இங்கு உங்களது சந்தேகம் என்னெவெனில், அழிப்பது எப்படி படைப்பாகும்? அதுவும் படைப்புதான். அழிக்காமல் படைக்க முடியாது. ஒன்றை அழிக்காமல் இன்னொன்றை படைக்க முடியாது. நாம் எதை படைக்க வேண்டும் என்றாலும், அதற்கு ஒரு சக்தி வேண்டும். அந்த சக்தி நாம் உண்ணும் உணவில் இருக்கிறது. அந்த உணவை உண்டு, ஜீரணம் செய்து, அதில் இருந்து பெற்ற சக்தியால் நாம் இந்த உடல் என்ற படைப்பை செய்கிறோம்.
அதுப்போல, மலையை உடைத்து, அதில் இருந்து கல் எடுத்து சிலை செய்கிறோம். இப்படி அழிப்பதும், படைப்பதும் சேர்ந்தே நிகழ்கிறது.
இந்த படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலை மூன்று கடவுள்கள் செய்வதாக கூறுகிறார்கள். அந்த மூன்று கடவுளும் ஒன்றுதான். அந்த ஈஸ்வர சாந்நித்தியம் நமக்குள் சுடர் விட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த மூன்றும் ஒரு சக்திதான் என்றால், அதற்கு ஒரு பெயர் இருக்க வேண்டும் அல்லவா? ஒரு பொருள் என்று இருந்தால், அதற்கு ஒரு பெயர் வேண்டும் அல்லவா? அதன் பெயர்தான் பிரணவம் என்ற ஓம். அது எப்படி ? ‘அ’ என்று சொல்லும் போது சொல் பிறக்கிறது. ‘உ’ என்று சொல்லும் போது அது நிலைக்கிறது. அதாவது, ‘அ’ என்ற சப்தத்தை நீண்ட நேரம் சொல்ல முடியாது. மூச்சு காற்று வேகமாக வெளியேறி விடும். ‘உ’ என்று சொல்லும் போது நீட்டி சொல்லலாம். சொல்லிப் பாருங்கள். ‘ம்’ என்று சொல்லும் போது அது அந்த சப்தம் முடிகிறது. இப்படி, தோற்றம், நிலைப்பு, முடிவு என்ற மூன்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு வார்த்தையில் சொல்வது என்றால், அதுதான் “ஓம்” என்ற ஒற்றை வார்த்தை. “ஓம்” என்ற பிரணவம் இயல்பான சப்தம். “ஓம்” என்ற பிரணவம் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலையும் கூறும் ஒரு சொல். சரி! மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வருவோம். அம்மா என்று சொன்னால், உங்களுக்கு உங்கள் தாயின் நினைப்பு வரும் அல்லவா. லட்டு என்று சொன்னால் லட்டின் ஞாபகம் வருகிறது அல்லவா? ஆக, ஒரு சொல், அது குறிக்கும் பொருளை நமக்கு நினைவுக்கு கொண்டு வரும். அது மட்டும் அல்ல, அந்த பொருள் சம்பந்தமான உணர்ச்சிகளையும் கொண்டு வரும். லட்டு என்றால், நாக்கில் எச்சில் ஊறும். காதலியின் பெயரைச் சொன்னால், காதலன் முகம் மலரும். எனவே, ஒரு சொல் அது குறிக்கும் பொருளையும், அது சம்பந்தமான உணர்ச்சிகளையும் கொண்டு வரும். “ஓம்” என்ற சொல், நமக்குள் இருக்கும் அந்த மாபெரும் படைப்பாற்றலை குறிக்கிறது. நாம் அந்த சக்தியை உணர வேண்டும். மனிதன் உன்னதமானவன். உயர்ந்தவன். படைப்பின் உச்சக்கட்டம் மனிதன். தன்னைத் தான் அறியாததால் கீழே விழுந்து விட்டவன்.
தன் திறமை, ஆற்றல் தெரியாமல் தவிப்பவன். அவனை கை தூக்கி விட்டு, அவனுடைய திறமையை, ஆற்றலை அவனுக்கு நினைவு படுத்துவது இந்த ஓம் என்ற ஒற்றைச் சொல். நன்றி!🙏

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்