திங்கள், 24 அக்டோபர், 2022

அன்பு உணர்வே ஆன்ம உணர்வு!

 


புத்தகம் இங்கே உள்ளது 👈

அன்பு இல்லாவிட்டால், இந்த பிரபஞ்சம் இல்லை. இந்த அன்புணர்வு அனைத்திலும் வெளிப் படுவதை உணர்ந்துக் கொள்ளக்கூடிய மேம்பட்ட மனம் படைத்த மனிதன் மட்டுமே, அந்த பேருணர்வை (ஆன்மாவை) தன்னுள்ளே அனுபவமாக உணர முடியும்.

அதாவது, பேருணர்வாகிய உணர்வுவெளி என்ற வெட்டவெளி மட்டுமே எங்கும், எதிலும் எல்லை இல்லாமல் நீக்கமற நிறைந்துள்ளது என்ற உண்மையை மனித மனம் மட்டுமே உணர முடியும்.

அதற்கான அடிப்படை தகுதிகளை அந்த மனித மனம் அடைந்தாக வேண்டும். அப்பொழுது மட்டும்தான் இறையனுபூதி என்பது என்ன? என்பதும் விளங்கும்.

அதற்கான வழிமுறைகள் மூன்று படிநிலைகளாக மூன்று வழிகளில் கூறப்படுகின்றன. அவைகளை, ச்ரவண, மனன, நிதித்யாஸனம் எனப்படுகின்றது. அதிலே, முதலில் வருவது ச்ரவணம். இரண்டாவது மனனம். மூன்றாவது நிதித்யாஸனம்.

இந்த மூன்று படி நிலைகளை, ஒவ்வொன்றாக மனிதன் தன் நடைமுறை வாழ்க்கையில் கொண்டு வந்தால் மட்டுமே, அவன் ஆன்மாவை (பேருணர்வை அல்லது இறைவனை) அனுபவமாக உணர முடியும். 

அதுவே நான்! [I am That!]


       நம் முகத்தையே நாம் கண்ணாடிக்குள்ளே மற்றொரு பிரதிபிம்ப முகமாகக் காண்பதுப்போன்று, பரமான்மாவின் (அறிவின்) நிழல் பிரதிபிம்பித்து, சீவனுக்கு (மனதிற்கு) சுயபுத்தி (மனம்) போன்று தோன்றுகிறது. 

கலங்கமில்லாத ஈஸ்வரவிருத்தி (பிரபஞ்ச மனம்) பிரதிபிம்பித்து, சீவனில் சிதாபாசன் என்றவாறு நம்முடைய தனித்த மனம் உண்டாகின்றது. 

 இவ்வாறு, பிரதிபிம்பித்த அந்த அகண்ட பேரறிவாகிய பிரம்மத்தின் அறிவுதான் தன்னுடைய சிற்றறிவு என்பதை அறிந்துக் கொள்வதைத்தான் இங்கு ஞானம் எனப்படுகின்றது. 

அதாவது, அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் என்ற மூன்றில் (திரிபுடி), அறிபவனாகிய மனம், அறிவு என்ற ஆன்மாவின் மூலமாக, அறியப்படுகின்ற பொருள்களான இந்திரியங்களைக் கொண்டு அனைத்தையும் அறிகின்றது என்று அறிவதே ஆத்ம ஞானம் என்று கூறப்படுகின்றது.

செவ்வாய், 4 அக்டோபர், 2022

இருமைகள்

 இருமைகள்

 ==========================



புத்தகம் இங்கு உள்ளது


பிறப்பு - இறப்பு

நன்மை - தீமை

புண்ணியம் - பாவம்

பகல் - இரவு

ஒளி - இருள்

நேர்மறை (+ve) - எதிர்மறை (-ve)

யின் - யாங்

வெப்பம் - குளிர்ச்சி

விருப்பு - வெறுப்பு

உண்டு - இல்லை

அறிவு - அறியாமை

பணிவு - திமிர்

உண்மை - பொய்

சரி - தவறு

நினைவு - மறதி

பழமை - புதுமை

மகிழ்ச்சி - துக்கம்

இலாபம் - நஷ்டம்

வேண்டும் - வேண்டாம்

ஆக்கம் - அழிவு

 

இவ்வாறு, ஏராளமான இருமைகளான எதிர் வினைகளை எடுத்துக் கூறிக்கொண்டே போகலாம்.

 இதிலே, ஒன்று இருக்க, அதற்கு வேறாக மற்றொன்று எங்கிருந்து அதற்கு எதிராக வந்தது...? 

இந்த முரண்பாடுகள் ஏன்...? என்றாவது இதைப்பற்றி யோசித்துப் பார்த்திருக்கின்றோமா...? 

இப்பொழுது யோசியுங்கள்...! 

ஆம்! இந்த இருமைகளை அறிந்தால்தான் இறைவ(தன்)னை அறிய முடியும்.

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்