புதன், 20 நவம்பர், 2019

ஆன்மா என்ற அம்மா - சிறு கதை புத்தகம்




(சிறு கதை)

இந்த உலக விவகாரத்தில் வெளிப்படையான உண்மை (Apparently Reality) என்னவெனில், ஒருவன் ஆசையின் காரணமாக, அறிவற்ற பல காரியங்களைச் செய்து, பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டு, தனக்கு நன்மையை மட்டுமே விரும்பும் தாய் கூறும் புத்திமதியை உதாசீனப்படுத்தி, அந்த தாயையும் அனாதையாக்கி அன்பு இல்லத்தில் சேர்த்து விட்டு, தன் பணத்திற்காகத் தன் பின்னால் வருகின்ற அற்ப உறவுகளை அவசியம் என்று கருதி, அதன் பின்னே சென்று, அறிய வேண்டியதை முழுமையா(Absolute Reality) அறியாமல் அற்ப ஆசைகளினால், மனதிடம் சிக்கிக் கொண்டு, ஆட்டங்கள் பல ஆடி, முடிவில் தான் வந்த இந்தப் பிறவியின் நோக்கம் புரியாமலேயே, இந்த மனித உடலின் மிகச் சிறப்பான ஆறாவது அறிவான புத்தியைப் பயன் படுத்தாமலேயே, இந்த புனித உடலை விட்டு மரணத்தை தழுவி விடுகின்றான்.

இந்த கதையிலிருந்து ஒன்றேயான பரமா(ஆ)ன்மாவையும், அதன் பிரதிபிம்பமான ஜீவனையும், ஒன்றென அறிய தடையாக இருப்பது ஆசை என்பதை அறிய வேண்டும்.

அப்படிப்பட்ட ஆசைகளை கண்ணிற்குத் தெரியாத சூக்ஷும மனமே தன் சம்ஸ்காரங்களாகச் சேர்த்து வைத்துக் கொண்டு, அவைகளை பரு உடலின் வாயிலாக அனுபவிக்க விரும்பி, அதற்கேற்ற உடலை ஸ்தூலமாக எடுத்து அனுபவித்துக் கொள்கின்றது.

வெள்ளி, 15 நவம்பர், 2019

தியானம்




தியானம் என்பது ஸ்ரீ பதஞ்சலி முனிவரின் அஷ்டாங்க யோகத்தின் ஏழாவது படி நிலை ஆகும்.

இதற்கு முன்பாக ஆறு படி நிலைகளை ஏற வேண்டும்.

ஆனால், எடுத்த உடனேயே தியானம் செய்ய பலர் விரும்புகின்றனர்.

தியானம் செய்வதற்கு முன் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை என்ற இத்தனை படி நிலைகளை கடக்க வேண்டி இருக்கிறது.

இன்று பலர் காலையில் குளித்து விட்டு சாமி படத்தின் முன்பு, சிறிது நேரம் அமர்ந்து "தியானம்" செய்தேன் என்கிறார்கள்.

அது அல்ல தியானம்.

தியானம் என்றால் எதைப் பற்றி தியானம் செய்வது?

கடவுளை என்றால் எந்தக் கடவுளை?

ஜோதி வடிவிலா?

எதை நோக்கி தியானம் செய்வது?

போன்ற கேள்விகள் எழும்.

உண்மை என்ன என்றால், இந்த அனைத்து கேள்விகளும் அர்த்தம் இல்லாதவை.

தியானம் என்பது எதைப் பற்றியும் அல்ல.

ஒன்றையுமே சிந்திக்காமல் இருப்பது தியானம்.

எதுவுமே மனதில் இல்லாமல் இருப்பது தியானம்.

மனம் முழுவதும் காலியாக இருப்பது தியானம்.

எதை பற்றியோ சிந்திப்பது என்றால், சிந்திக்கும் நான், சிந்திக்கப்படும் அது என்ற இரண்டு இருக்கும் அல்லவா?

இங்கே ‘துவைதம்’ உண்டாகிவிடும்.

துவைதம் என்றால் இரண்டு. 

அத்வைதம் என்றால் இரண்டற்றது என்று பொருள்.

தியானத்தில் அந்த இருமைகள் மறையும்.

நான், அது என்று வேறுபாடு மறைந்த பின் எதை சிந்திப்பது? 

எதை தியானம் செய்வது?

சித்தம் முழுமையான வெற்றிடமாக இருக்கும்.

அந்த வெற்றிட அனுபவமே சிவானுபவம்.

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்